July 10, 2006

இசையுடன் ஓர் இரவு

இசை செய்யும் வித்தைகள் ஆயிரம். கொஞச காலமா எனக்கு பிடிச்ச இசையை கேக்க முடியல. இன்னைக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது. சும்மா இளையராஜா பாடலை தட்டி விட்டேன். அருமையான பாடல்கள். உடலில் புகுந்து உயிரில் கலந்தது இசை. நான் ரொம்ப ரசிச்ச பாடலின் வரிகள் உங்களோட பகிர்ந்துக்க போறேன்.

இதயம் ஒரு கோவில் -- இதய கோவில்

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன் (2)

(இதயம் ஒரு)

ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜ“வ நாடிதான் ராகம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல
எனது ஜ“வன் ஒன்றுதான் என்ரும் புதிது

(இதயம் ஒரு)

காமம் தேடும் உலகிலே ஜ“வன் என்னும் கீதத்தால்
ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா
அவர் பாடலின் ஜ“வன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜ“வன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது

(இதயம் ஒரு)

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜ“வன் எனை ஆண்டாயே
வாழ்க என்றும் வளமுடன் என்ரும் வாழ்கவே

(இதயம் ஒரு)

என்னைக்கவர்ந்த இன்னும் சில திரைப்பாடல்கள் இங்கே.

http://thirai-kavithaigal.blogspot.com/

இசையுடன்,

ஸ்ரீதர்

0 Comments:

Post a Comment

<< Home