August 02, 2006

நவீன புலிகேசிகள் -- வலையில் விழுந்தது ! -- தினமலர்




கோக கோலா மற்றும் பெப்சி குளிர் பானங்களில் அளவுக்கு அதிகமாக ரசாயன நச்சு இருப்பது தற்போது நடந்த ஒரு ஆய்வின் மூலம் மீண் டும் தெரிய வந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற ஒரு புகாரை தெரிவித்த பிறகும் அவ்விரு நிறுவனங்களும் இந்த விஷயத்தில் எந்தவித மாறுதலும் மேற்கொள்ளவில்லை என்பது இதன் மூலம் நிருபணமாகியுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களான கோக கோலா மற்றும் பெப்சி குளிர்பானங்களில் அளவுக்கு அதிகமான பூச்சி கொல்லி மருந்து உள்ளது என்று 2003ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்தது. இந்த ஆய்வை மேற் கொண்டது அறிவியல் மற்றும் சுற்றுசுழல் மையம் என்ற அமைப்பு தான். அப்போது இப் பிரச்னை பூதாகரமாக வெடித்தது. மக்களின் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் இந்த குளிர்பானங்களை இந்தியாவில் விற்பனை செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று பல தரப்பிலும் இருந்தும் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற் பட்டது. இதுப்பற்றி விசாரிக்க பார்லிமென்ட் கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அதன்பிறகு இப்பிரச்னை அமுங்கி விட்டது. தண்ணீரில் காணப்படும் பூச்சி கொல்லி மருந்து தான் குளிர்பானங் களிலும் காணப்படுகிறது என்று அப்போது இதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில், கோக கோலா மற்றும் பெப்சி குளிர் பானங்களில் உள்ள பூச்சி கொல்லி மருந்தின் அளவை பரிசோதிக்க அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மையம் மீண்டும் ஒரு ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது.

இதற்காக கோக கோலா மற்றும் பெப்சி சார்பில் விற்பனை செய்யப்படும் பிரபலமான 11 பிராண்ட் குளிர் பானங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன. பன்னிரண்டு மாநிலங்களில் உள்ள 25 தொழிற்சாலைகளில் இருந்து 57 மாதிரிகள் திரட்டப் பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வின் மூலம் கிடைத்த தகவல்கள் குறித்து அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மையத்தின் இயக்குனர் சுனிதா நாராயண் டில்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து குளிர்பானங்களிலும் மூன்று முதல் ஐந்து வரையிலான பல்வேறு பூச்சி கொல்லி மருந்துகளின் கலவை காணப்பட்டது. இந்திய தர நிறுவனம் சார்பில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 25 மடங்கு அதிகமான அளவு பூச்சி கொல்லி மருந்து அந்த குளிர்பானங் களில் இருந்தன. மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்த போது இந்த குளிர்பானங்களில் நான்கு பூச்சி கொல்லி மருந்துகளின் கலவையே இருந்தது. தற்போது இது ஐந்து பூச்சி கொல்லி மருந்துகளின் கலவையாக உயர்ந்துள்ளது.லின்டேன் என்ற புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயன நச்சு அனுமதிக் கப்பட்ட அளவை விட 54 மடங்கு அதிகமாக இந்த குளிர்பானங்களில் காணப்பட்டது. இதே போல் குளோர்பைரிபாஸ் என்ற ரசாயன நச்சின் அளவு 47 மடங்கு அதிகமாகவும், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஹெப்டாகுளோர் என்ற ரசாயன நச்சு 71 மடங்கு அதிகமாகவும் இந்த குளிர்பானங்களில் காணப்பட்டன. இதில் அனுமதிக் கப்பட்ட அளவை விட பெப்சி குளிர்பானங்களில் 30 மடங்கு ரசாயன நச்சும், கோக கோலாவில் 27 மடங்கு ரசாயன நச்சும் இருப்பது தெரிய வந்துள்ளது.

மக்களின் உடல் நலன் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே இந்த ஆய்வு வெளிப்படுத் துகிறது. இந்த குளிர்பானங்களை பாதுகாப்பானதாக்க கடந்த காலங் களில் குறைந்த அளவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுனிதா நாராயண் கூறினார்.

2 Comments:

At August 03, 2006 12:58 AM, Blogger அசுரன் said...

நல்ல கட்டுரை,

இதே விசயத்தை பற்றிய எனது கட்டுரையை படித்து கருத்து சொல்ல அன்புடன் அழைக்கிறேன்.
http://poar-parai.blogspot.com/2006/08/blog-post.html


நன்றி,
அசுரன்.

 
At August 05, 2006 1:36 PM, Blogger ALIF AHAMED said...

முடிந்த அளவு இவற்றை நம்மளவில் தவிர்போம்.

சமுகம் தானாக உணரும்,உயரும் என்பதே என் கருத்து.

 

Post a Comment

<< Home