July 12, 2006

சமையல் குறிப்பு -- பயம் தவிர்க்கவும்

தேவையான பொருள்கள்:

அரிசி -- 3 கிண்ணம்.
பருப்பு -- 1 கிண்ணம்
புளி -- சிறிதளவு,
கத்திரிக்காய் -- 1,
முருங்கை -- 4 துண்டுகள்,
வாழக்காய்
கேரட்
பீன்ஸ்
உருளை
மிளகாய் தூள்
உப்பு
தேங்காய் துருவல்
கிளங்கு

செய்முறை:

1. அரிசி : து. பருப்பு --> 3:1 எடுத்து கொள்ளவும்.
2. அதில் புளி கரைசல், காய்கறிகள், மிளகாய்தூள், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து

குக்கரில் வைத்து வேக வைக்கவும்.
3. இக்கலவையுடன் எண்ணெய், கடுகு தாளித்து சேர்க்கவும். தனியாக தாளிப்பு செய்து சேர்க்கவும்.

அரிசி + பருப்பு ---> தண்ணீர்
3 + 1 ---> (4 x 3) = 12 கப் தண்ணீர்

அரிசி : தண்ணீர்
1 : 2
பருப்பு : தண்ணீர்
1 : 3

பயப்படாதிங்க.. என்ன பாருங்க எவ்வளவு தைரியமா இருக்கேன்.. இதுக்கே பயந்தா எப்படி..
ஒன்னும் இல்லைங்க.. சென்னை போய்ட்டு வந்த கதை இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கு. அதையும் சொல்லி முடிச்சிக்கிறேன்.

இங்கே பக்ரேன் ல நானே சமையல் பண்ணி சாப்பிட்றேன் வீட்லே சொன்னேன். அதுக்கப்புறம்
நடந்த கூத்து தான் மேலே சொன்னது. சித்தி, அத்தை னு ஒருத்தர் விடாம சமையல் குறிப்பு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. சமையல் செய்றத விட, இவங்க சொன்ன சமையல் குறிப்பு எல்லாம் எடுத்து எடுத்து கையே வலிக்க ஆரம்பிச்சிடிச்சி.

ஒரு நாள் அம்மா கூட்டாஞ்சோறு செய்திருந்தாங்க. அம்மா சமையல் யாருக்கு தான் பிடிக்காது,
அதுவும் இல்லாம ஒரு 8 மாசமா பாலைவனத்துல கஷ்டப்பட்டிருந்தேன். அதனால சும்மா
பாத்திக்கட்டி சாப்பிட ஆரம்பிச்சேன். அண்ணிக்கு ரொம்ப சந்தோஷம், அவங்க செய்றத அந்த
அளவுக்கு நான் விரும்பி சாப்பிடமாட்டேன். அன்னைக்கு என் கிரகம், நான் நல்லா சாப்பிடறத
பாத்துட்டு சரி இதை இவனுக்கும் சொல்லி தந்துடுவோம் முடிவுப்பண்ணிட்டாங்க.

நான் இதுக்கு தீவிரமா எதிர்ப்பு தெரிவிச்சேன். கடைசியா எனக்கு "கூட்டாஞ்சோறு செய்வது எப்படி" னு எழுதி தந்தா போதும் னு ஒரு மனதா திர்மானம் போட்டோம். சரி எழுதுறது யாரு? நாம அந்த மாதிரி கஷ்டமான வேலை எல்லாம் செய்ய மாட்டோம். அதனால அண்ணியே அந்த வேலைய எடுத்துக்கிட்டாங்க. எல்லோரும் சுத்தி அமர்ந்துட்டு வேலைய ஆரம்பிச்சோம். அம்மா சொல்ல சொல்ல அண்ணி எழுத அரம்பிச்சாங்க. நான் ஸ்ரீராம கைல வச்சிக்கிட்டு வேடிக்கை பாக்க ஆரம்பிச்சேன்.

இப்போ தான் குழப்பம் ஆரம்பம். எப்படி எழுதினா நல்லா வரும். அம்மா ஒரு வரி சொல்ல,
அதையே அண்ணி எழுத்து வடிவிலே போட, அப்பா அதற்கு சம்மதம் தரல. ஒரு வாக்கியத்துக்கு பல விதமான வடிவங்கள் தந்தாங்க. கொஞ்சம் காகிதமும், நேரமும் செலவான பிறகு மேலே சொன்ன சமையல் குறிப்பு தயாரானது. அதுல கடைசியா இருக்கிற புள்ளிவிவரம் அப்பா பிறகு சேர்த்தது.

அம்மா எப்படிப்பார்த்தாலும் ஒரு 30 வருஷமா சமையல் பண்ணிட்டு இருக்காங்க, அண்ணி இந்த கூட்டணில சேர்ந்து 3 வருஷமாச்சு. இவங்களால ஒரு சமையல் குறிப்பு எழுத இவ்வளவு நேரமாச்சி ஒரு கேள்வி?.

நான் இந்த வேலைக்கு சேரும் போது முதல்ல ஒரு 2 மாசம் Training அனுப்பினாங்க. அந்த
Training ல ஒரு பாடம் 'Effective Technical Writing Skill'.

சரி இந்த பாடத்தை இப்போ நான் சொல்ல போறது இல்ல. (நல்ல வேலை நிங்க எல்லாம்
தப்பிச்சிங்க). அதில் இருந்து சில முக்கிய கருத்துக்கள். எழுத ஆரம்பிக்கும் மூன் நனைவில் இருக்க வேண்டிய கேள்விகள்.

* யாருக்காக எழுதப்போகிறோம்?
* எதற்க்காக எழுதப்போகிறோம்?
* என்ன எழுதப்போகிறோம்?
* எப்படி எழுதப்போகிறோம்?
* எப்போழுது எழுதப்போகிறோம்?

இவை அனைத்திற்க்கும் விடை இருந்தால் நாம் எழுதும் எந்த கோப்பும் சரியான இலக்கை
அடையும்.

இவ்வளவு சொன்ன பிறகு, யாராவது இந்த கூட்டாஞ்சேறு செய்து பார்த்து நல்லா இருக்கானு
சொல்லவும்.சரி கடைசியா ஒரு உண்மையை சொல்றேன். மேலே சொன்ன அந்த 5 கேள்விகளும் எனக்கு இந்த பதிவு எழுதும் போது மறந்துவிட்டது. அப்புறம், என்னோட 'Training Documents' ல தேடி எடுத்து படித்து போட்டேன்.

நட்புடன்,

ஸ்ரீதர்

0 Comments:

Post a Comment

<< Home